பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

81



இந்தப் பண்டிகைக் காலத்தில் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைப்பதும், அரசர்கள், மடாதிபதிகள் முதலியோர் கொலுவீற்றிருப்பதும், பெண்கள் ஒருவரையொருவர் வரவேற்றுப் போற்றுவதும் நடைமுறை வழக்கம். ஆக இந்தக் கொண்டாட்டம் முழுக்க முழுக்க பெண் தெய்வ வழிபாட்டின் ஒரு கூறு (அம்சம்) ஆகும்.

கொற்றவை வழிபாடு

சிவனுடைய தேவியாகிய சிவைக்குப் பல வகையான பெயர்கள் இருப்பதுடன், பல வகையான கதைகளும் சிவை பற்றிச் சொல்லப்படுகின்றன். சிவைக்குப் பல் வகையான உருவங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று: சிங்க ஊர்தியில் (வாகனத்தில்) அமர்ந்து, மகிடாசுரனைக் கொன்று அவன் மார்பில் பாய்ச்சிய வேல் அல்லது சூலத்துடன் இருக்கும் தோற்றமாகும். இந்தத் திருமேனித் தோற்றத்திற்கு வட மொழியில் “துர்க்கை” என்னும் பெயரும் தமிழில் கொற்றவை என்னும் பெயரும் தரப்பட்டுள்ளன, சிவையாகிய பகவதிக்குக் கொற்றவை என்னும் பெயரும் துர்க்கை என்னும் பெயரும் உண்டு என்பதைத் திவாகரரின் சேந்தன் திவாகர நிகண்டினாலும், மண்டல புருடரின் சூடாமணி நிகண்டினாலும் அறியலாம். அப்பாடல் பகுதிகள் வருமாறு:-

சேந்தன் திவாகர நிகண்டு - தெய்வப் பெயர்த் தொகுதி 23-ஆம் பாடல்:

“கொற்றவை, ஐயை, காாத்திகை, கெளரி,
துர்க்கை, சூலி, மகிடற் காய்ந்தாள். .......
மேதித் தலைமிசை விசயை...........
சீர்சால் பகவதி சிறந்ததொல் பெயரே.........”

சூடாமணி நிகண்டு தேவப் பெயர்த் தொகுதி - 40, 41-ஆம் பாடல்களில் உள்ள பெயர்கள்:-