பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ரசிகமணி டிகேசி




விமானம்
11 மணி காலை
17.8.47

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

எனக்கும் பலராமுக்கும் கடிதங்கள் வந்தன. காலை 7 மணிக்குக் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டோம். 1.30 க்கு சென்னை போய் சேருவோம். கல்கி, சின்ன அண்ணாமலை நான் ஆகிய மும்மூர்த்திகளும் சாந்திநிகேதனுக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குள்ள நிபுணர்களுக்குத் தமிழ்நாடே கலைக்கு விளைநிலம் என்பது தெரியும். அதனால் எங்களுக்கு அபார வரவேற்பு.

கல்கியும் சின்ன அண்ணாமலையும் பத்திரிகை ஆசிரியர்கள். ஆகையால் அவர்களை அப்படியே விட்டு விட்டார்கள். ஆனால் என்னை அங்கேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி விட்டார்கள். எனக்கும் அது ஆசைதான். நம்முடைய உடல் மற்ற காரியாதிகள் சம்மதிக்கவா செய்யும்.

நந்தலால், போஸ், ரவீந்திரநாத் தாகூர், மூக்கில்தே முதலானோர்கள் கூடிய ஒரு கூட்டத்தில் சொன்னேன். சிற்பக் கலைக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள சம்பந்தம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம். ஆனாலும் தமிழ்ப்பண்பாடு சிறந்து தனித்து விளங்குகிற காரியம் மூன்று உண்டு.

1. பரதநாட்டியம், 2. சங்கீதம், 3. கவி. இந்த மூன்று கலைகளும் தமிழ்ப் பாஷையோடு கலந்திருப்பதால் மற்றவர்களுக்கும் பூரணமாய் அறிந்துகொள்ளுவது கஷ்டம்.

மேலும் அந்த மூன்று கலைகளின் உதவியாலேயே சமயத் தெளிவு உண்டாயிருக்கிறது. கோயில்களும்