பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

121


பசப்பு. அதுவும் இரண்டு நாளில் காய்ந்துவிடும். ஒருவாரமாகக் கொஞ்சம் நடைபழகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம். அதனால்தான் ஆறிய புண் கொஞ்சம் தொந்தரவு கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுதான்.

வேலூரைச் சுற்றியுள்ள நன்னாடு தங்களை நன்றாய் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மிக்க சந்தோஷம். தாங்களும் மகாராஜனும் எங்கே இருந்தாலும் சரி, தமிழ்ப்பயிர் நன்றாய் விடுகிறது. மிக்க திருப்தி.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖