பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

73




திருக்குற்றாலம்
தென்காசி
13.4.45

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

புதுவருட வாழ்த்து கிடைத்தது. வெகு அழகாய் இருக்கிறது. பொங்கலைப் பரிமாறப் பூச்சூடி அழகாய் வருகிறாள் பெண். இறைவனோடு திளைத்த மாணிக்கவாசகரது உள்ளமும் பால் பொங்கினது போலப் பொங்கிப் பொழிகிறது. அரிய முறையில் அரிய விஷயத்தை நினைவூட்டுகிறது செய்யுள். ரொம்ப சந்தோஷம்.

தங்கள் வீட்டிலும் அருமை மக்களது உவகை ஆரவாரங்களுக்கு இடையே அழகாய்ப் பால்பொங்கும். நல்ல காட்சிதான்.

அருமை ராஜேஸ்வரிக்கு உடம்பு பழைய ஆரோக்கியத்துக்கு வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

15.1.45 அன்று சாயங்காலம் வண்ணார்பேட்டை வருகிறேன். தங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.

எனக்கு உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறது.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖