பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியன் இரணியன்:- [கோபமாய்] இதே கோத்திற் செல்.சீக்கி ரம் செல். மாடுகளைப் பிணைப்பதுபோல் அவர் கள் அனைவரையும் சரமாகப் பிணைத்து அவசா மாக நம்மால் கூட்டப்படும் வியாயசபைக்குக் கொண் டுவச. போ! இன்னும் சேவகர்களை அழைத்துப் போ ! நமது இந்த ஆணைக்குக் கீழ்ப்படியாதவர் களைக் கண்டங்கண்டமாய் வெட்டிவீழ்த்து. நாளைய மறுநாள் காலை அவசர நியாயசபை கூட் டப்படும். விரைந்து போ. [தூதுவன் வணங்கி மறைதல்.] 22 லீலாவதி! பார்த்தனையா ஆரியச்களின் அட்ட காசத்தை? லீலாவதி:-காதா! நமது தமிழர்கள் ஆரியர் வார்த்தை வில் மயங்குவதுதான் விந்தையாக இருக்கின்றது! இரணியன்:- தமிழ் வாலிபர்களை ஆரியர் பெண்களைக் கொண்டு வசப்படுத்துவதுண்டு. ஆரியப்பெண்கள் வெண்ணிற முடையவர்களாயிருக்கின்றார்கள்.நம் காட்டிலுள்ள அரசர்களைத் தந்திரத்தால் வசப் படுத்தியதோடு சூழ்ச்சியால் அவர்களைக் கொன்றார் கள். தங்களை வணங்கிப் பூசித்தால் மறுபிறப்பில் செசர்க்கம் என்ற ஓரிடத்தில் இருந்துகொண்டு பல இன்பங்களை அடையலாம் என்றல்லவா கூறுகிறார் கள்? தம்மை எதிர்ப்பவர்கள் நாகம் என்ற இடத் தில் மகா துன்பம் அடையவேண்டும் என்பார்கள். இவைகளை நம்புகிறவர்கள் அவர்கள் வசப்பட்டு விடுகிறார்கள். முளையிலேயே நமது பெரியோர்கள்