பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இணையற்ற வீரன் சித்ரபானு:- நான் கூறுகின்றேன். அவர்களை விடுதலை செய்யுங்கள். முதலில் நான்கு கொலையாளிகளை யும் வேலை முடித்து விடுங்கள். பிறகு எல்லா மர்மத்தையும் சொல்லிவிடுகிறேன். போய் வாருங் கள். சேனாதிபதி:- [கொலையாளிகளிடம் போய்] கொலை யாளிகளே! நமது சக்ரவர்த்தியின் இன்றைய உத் தரவுப்படி நீங்கள் முதலில் இந்த இடத்திலேயே அந்த ஆரியப் பாதிரிகளைக் கொலை செய்யவேண் டும். அதற்காக நீங்கள் வட்டப்பாறையில் உங்கள் தலையை வைத்து மாதிரி காட்டுங்கள். (அங்கி (15 க் த வட்டப்பாறையின் மீது கொலையாளிகளும் தங்கள் தலை நான்கு களை வரிசையாகக் குனிகிறார்கள். உடனே சேனாதிபதி நால்வரையும் சிரச்சேதம் செய்கிறான்.) சேனாதிபதி:- ஆரியர்களே! சுகமாக நீங்கள் உங்கள் வீடுபோய்ச் சேருங்கள். உங்கள் மீட்சிக்கு, இதோ, இந்த எனது சித்ரபானுதான் காரணம்; அவளை வாழ்த்துங்கள். ஆரியர்:- ஸ்ரீமந் நாராயணன் கிருபையால் கூடிய சீக்கிரம் நீங்கள் இந்நாட்டின் சக்ரவர்த்தியாகவும் மகிஷியாகவும் ஆகக் கடவீர். நாங்கள் போய் வரு பட்ட கிறோம். (போகிறார்கள்.] F. 4.