பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 ரத்தக் கண்ணீர் காட்சி 33] வேதாளம், (பழுதூர் அஞ்சல்மனை அஞ்சற் பையைப் பிரித்து உள்ளேயிருக்கும் ஓலைகளைக் கவனித்தபடி யிருக் கிறான். திடீரென ஒரு ஓலையின்மீது அவன் கண்கள் பாய்கின்றன. '*ஆங்! அகப்பட்டுக்கொண்டார்கள் படி அந்த ஓலையைப் படிக்கிறான். ஒலையாவது: என்று குதித்த 'அன்புள்ள திருசங்குவுக்கு சுகதேவ் எழு தியது. வேங்கைபுரத்திற்கு அருகில் ஐம்பது கல் தூரமுள்ள ஆனந்த நகரில் தங்கியிருக் கிறேன். இங்குள்ள கண்ணாடி மாளிகையை நமது திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருக் கிறேன். நீர் உடனே முத்தாயியை அழைத்துக் கொண்டு இங்கு வந்து சேரவும். திருமணத்திற் கான ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துவிட் டேன். உடனே புறப்படவும். சுகதேவன் ஓலையைப் படித்து முடித்ததும் வேதாளத் திற்கு பூரிப்பு பொங்குகிறது. அதே சமயம் அவன் உள்ளத்தில் சூழ்ச்சி உருவாகிறது என் பதை அவன் விகாரமுகத்தில் எழும் ரேகைகள் விளக்குகின்றன.

  • சுகதேவுக்கும்--முத்தாயிக்கும் திருமணம்!-வேதா னத்தின் யோசனைப்படி ! வெற்றிவேலனின் ஜெயத்திற் காக நான் போட்ட திட்டம் பாதி நிறைவேறிவிட்டது. பாவம் - எலிப்பொறியைத் தேடிவரும் எலிகள் ; சுகதேவ் -திருசங்கு / வேதாளம்! உனக்குச் சரியான பரிசு காத் திருக்கிறது. வெற்றிவேலனின் கையிலே முத்தாயி- வேதாளத்தின் கையிலே முத்துக் குவியல் ! சபாஷ்!" சபாஷ்"

வேதாளம் துள்ளி எழுகிறான்.