பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 இரத்தக் கண்ணீர் காட்சி 46] [முத்தன் குடிசை தனவணிகர் வீட்டுக்கு குழந்தையை வைத் துக் கொண்டு முத்தனும், முத்தாயியும் விளை யாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது அன்பு மொழியும் பாட்டைக் கேட்டுக் கொண்டு அந்தத்தளிரும் ஈறுகாட்டி சிரிக்கிறது-முத்தன் முத்தாயியிடம்- முத்தன் : இதுமாதிரி நமக்கொன்று...! முத்தாயி: இன்னும் எட்டு மாதம் பொருத்திருங்கள். முத்தன்: அப்படியா? என்னிடம் சொல்லவே இல்லையே ஆமாம்! நம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது? முத்தாயி: நம் இருவர் பெயரையும் சேர்த்துவைத்து விடுவது. 68 முத்தன்: அதுதான் சரி - உன்பெயர் முதல் இரண்டு எழுத்தையும் என்பெயர் கடைசி இரண்டு எழுத்தை யும் சேர்த்து - உன் முதலிரண்டு எழுத்து... ' முத்" என் கடைசி இரண்டெ -ழுத்து த ன்" - முத்தன்!... சே ! சே!... ஊஹும் என்பெயர் முதலிரண்டு எழுத்து... உன்பெயர் கடைசி இரண்டெழுத்து.. என் முதலிரண்டு எழுத்து 'முத் உன் கடைசி இரண்டெழுத்து... தாயி".... முத்தாயி!... 02 டாடா?... வரமாட்டேன் என்கிறதே. அடா