பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 காட்சி 48] இரத்தக் கண்ணீர் [தனவணிகர் வீடு குழந்தையுடன் தனவணிகர் உள்ளே நுழை கிறார். அவரது மனைவி குழந்தையை வாரியணைத் துக் கொண்டு ஆண்டவனுக்கு நன்றி செலுத்து கிறாள். அவளும் கேட்கவில்லை; முத்தாயி எங்கே என்று! கேட்பதற்கு ஒருவன் இருக்கிறானே : உரிமை படைத்தவன் அவன் கேட்கிறான். தனவணிகர் : நான் போகவில்லை யென்றால் குழந்தை அவ்வளவு தான்! காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து... முத்தன்: ஆ! முத்தாயி எங்கே? தனவணிகர் : அடேடே!... நான் அவசரத்தில் அவளை மறந்தே விட்டேன். முத்தன் : மறந்து விட்டீர்கள் ; என் மனைவியை மட்டு மல்ல: உங்கள் சீமான் இனம்; இரக்கமெனும் ஒரு பண்பையே மறந்து பல நாளாயிற்று? வேகமாக ஓட ஆரம்பிக்கிறான். வீட்டுக் காரர் கண்ணில் படும் வரையில் நொண்டி போல ஓடுகிறான். பிறகு பொன்னன் ஓடவில்லை : முத் தனே ஓடுகிறான் !