பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 163 மு. கருணாநிதி கடாசி 56] முத்தன் (சுமதி வீடு, தெருப்பக்கம் வேகமாக வந்து கொண்டிருக் கிறான், சுமதியின் வீட்டிலிருந்து இறங்கி ! அவனை ஒரு குரல் அழைக்கிறது. திடுக்கிட்டுத் திரும்புகிறான். சுகதேவ் வருகிறான். முத்தன் பயந்து விடுகிறான். சுகதேவ்: பயப்படாதே முத்தா ! முத்தன்: என்ன விஷயம்? சுகதேவ்: வேதாளம் சாமியார் வேஷத்தில் அலைகிறான். முத்தன்: அதற்கென்ன இப்போது? சுகதேவ் : என்னுடைய காதலி முத்தாயியை ஏமாற்றி என்னமோ. தெரியவில்லை : அவளை அழைத் துக்கொண்டு எங்கேயோ போகிறான். முத்தன்: ஆ!- சுகதேவ்: அவனுடைய ஆஸ்ரமத்துக்குத்தான் போயி ருப்பான். என்னோடு வா ! காட்டுகிறேன் தயவு நான் செய்து நீ முத்தாயியைப் பார்த்துக் கொள். உடனே போய், இந்த ஊரிலுள்ள பாதுகாப்பு வீரர் களை அழைத்து வருகிறேன். முத்தன்: முதலில் முத்தாயி இருக்குமிடத்தை காட்டும்!- சுகதேவ்: வாவா!-- (இருவரும் ஓடுகிறார்கள்]