பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 90 175 பலதேவர்: அவன் இங்கு வேலைக்காரனாயிருந்தவன். பூபதி: வேலைக்காரனுக்காக வருத்தப்பட்டவர்கள் - உங் கள் வரலாற்றிலேயே கிடையாதே! பலதேவப்பிரபு அவர்களே! இந்தப் படிகளை நான் ஏன் எண்ணிப் பார்த்தேன் தெரியுமா? இருபத்து மூன்று ஆண்டு களுக்கு முன் - நான் எண்ணிய முப்பத்தாறு படிகள் சரியாக இருக்கிறதா என்பதற்காகத்தான் ! பலதேவர் : விபரமாகச் சொல்லும். பூபதி: சொல்லுகிறேன் - இருபத்து மூன்று ஆண்டு களுக்கு முன்னால் - நீங்கள் உங்கள் மனைவி-குழந்தை சுகதேவ் - மூவரும், காசியாத்திரை சென்றுவிட்டு. இமயகிரி முதலியவைகளை சுற்றிப் பார்த்துவர சென் றிருந்தீர்கள் அல்லவா? பலதேவர்: ஆமாம். பூபதி : நீங்கள் திரும்பிவர இரண்டு ஆண்டுகள் பிடித்தது. பலதேவர்: ஆமாம். பூபதி: இலையராணி பூங்காவனமும் அவர்களுக்குப் பாதுகாப்பாக காவேரி என்றவளும் அரண்மனையில் இருந்தார்கள் அல்லவா? பலதேவர்: ஆமாம்! பூபதி: ஆகா நன்றாக ஞாபகமிருக்கிறது - இப்போது நடப்பதுபோல் இதோ எல்லாம் என் கண் முன்னே காட்சியாகின்றன அந்தக் காட்சியை அப்படியே சொல்லுகிறேன் கேளுங்கள்.