பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

180 இரத்தக் கண்ணீர் முத்தாயி: அத்தான்! உங்கள் பின்னாலேயே நானும் வருவேன். நம்மை யாரும் பிரிக்க முடியாது! ஒரு முத்தன் : பைத்தியம்! ஏதோ காதலர்களுக்காக : உலகம் கட்டிவைத்திருப்பதாகவும், அந்த உலகத்தில் செத்துப்போன காதலர்கள் குடியேறலாமென்றும் யாரோ ஒரு ஆசைக்காரன் கிறுக்கிவைத்துவிட்டுப் போனான்! அதை நம்பி நீயும் பிணமாகிவிடாதே!" உயிர்விடப்போகும் நான் உன்னிடம் கேட்கிற ஒரே உறுதி- உனக்கு இடுகிற ஒரே ஒரு அன்பு ஒரு உத்திரவு..... முத்தாயி: எதுவானாலும் கேட்கிறேன் முத்தன் : நீ சாகாமல் வாழவேண்டும் என்பதுதான். முத்தாயி: நான் வாழமுடியாதவள்...அத்தான். முத்தன்: கண்ணே! உன் வயிற்றிலே வளருகிற நம் காதற் களஞ்சியத்தை நான் காண முடியாவிட்டா லும் நீ கண்டு களிப்பவள். அந்த இன்ப எதிர் காலத்தை நினைத்து நான் இப்போது ஒரே ஒரு சந்தோஷ மூச்சுவிடுகிறேன். முத்தாயி: அத்தான்! முத்தன் : அழாதே கண்ணே! அழாதே! உன்னை சிரித்த முகத்தோடு என் சிந்தைக் குளிர ஒருமுறைப் பார்க்கிறேன். எங்கே... என் செந்தமிழே! சிரிப்புக் காட்டு! முத்தாயி: அத்தான்!