பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை இரத்தக் கண்ணீர் தழுவல் ஓவியம். ஆனால் முழுவதுமல்ல. இரகசியத்தை அம்பலமாக்கும் பூபதி என்ற மருத்துவரும் இன்னும் சில அடிப் படைக் கருத்துக்களுமே வேறு மொழி நவீனத்தி லிருந்து இரவல். மற்றெல்லாம் சமுதாய நிலை யின் படப்பிடிப்பு. காலம் - மிகப் பழமையும் புதுமையுமற்ற இடைக்காலம். சிற்றரசர்களும், பாளையக்காரர் களும் நாட்டின் பல பகுதிகளில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்த கால மெனில் மிகப் பொருந்தும். கதையில் வரும் இடங்களும் கற்பனைகளேதான். இடைக்காலத்து கற்பனை யொன்றின் வாயி லாக இந்தக் காலத்துக்குத் தேவையான கருத் துக்களைச் சொல்ல ஆசைப்பட்டேன். அது தான் இது! இதை உங்களிடம் தரும் திராவிடப் பண்ணையார் என் நன்றிக்குரியவர். அதோடு, இந்நூலெழுத வாய்ப்பும் - ஓய்வு மளித்த அரசியலார் பெரு நன்றிக்குரியவர்கள். திருச்சி மத்ய சிறை ? 20-153. S மு. கருணாநிதி.