பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணா காட்சி 19] 67 (தென்றல் மாளிகை. வெற்றிவேலன், வேதாளம் முன்னிலையில் முத்தன், படையில் பெயரைப் பதிவு செய் கிறான். வெற்றிவேலன்: பெயர்? முத்தன் : முத்தன். வெற்றிவேலன் : தகப்பனார் பெயர் ? முத்தன் பதில் சொல்ல முடியாமல் விழிக் கிறான். வேதாளம்: அது ஒன்றும் தேவையில்லை. வெற்றிவேலன் : ஒகோ ! .. சரி. தாயார் பெயராவது தெரியுமா? முத்தன் : தாயார் காவேரி--இறந்துவிட்டார்கள். வெற்றிவேலன் : சரி-கையொப்பமிடு. 6 ஓலையொன்றில் முத்தன் கையொப்ப மிடுகிறான். அப்போது தன் காதலியின் நினைவில், 'முத்' என்று எழுதிய பிறகு, தாயி” என்று எழுதி 'முத்தாயி' என்று எழுதிவிடுகிறான். பிறகு திருத்தி, முத்தன் என்று எழுதுகிறான். வெற்றிவேலன்: உம் -பயப்படாமல் போடு!