பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரத்தக் கண்ணீர் என்ற எழுத்துக்கள் தூசி வாயிலிலே 'அஞ்சல் மனை படிந்து காணப்படுகின்றன. கம்பீரமான குதிரையொன்றை ஒரு கட்டுக் கோப்பான தேகமுடைய வாலிபன் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் குன்றை வெல்லும் தோற்றமுடை யவை. முகமோ வீரக்களை வாய்ந்தது. உதடு களைக் குவித்து ஏதோ ஒரு பாட்டை புல்லாங் குழல் ஒலியில் ஊதிக்கொண்டே குதிரை தேய்க் கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். அந்த வீட்டின் உட்புறத்திலே-நடுத்தர வய துடையவனா அல்லது கிழவனா என்று உறுதி யாகச் சொல்லமுடியாத வண்ணம்- காலரேகை களால் சூழப்பட்ட முகத்தையுடைய ஒரு மனி தன் தனது கூரிய கண்களை அங்குமிங்கும் செலுத்தியபடி கையிலேயுள்ள முத்திரை குத் தும் கருவியை உருட்டிக்கொண்டிருக்கிறான். அவனுக்கெதிரே சுருள் சுருளாக கட்டப்பட்டுக் கிடக்கும் ஓலைகள் குவிந்திருக்கின்றன. அவை களை ஒருமுறை பார்க்கிறான். அந்த மனிதன். ஒரு அசாதாரணமான வெறுப்பு அவன் உள் ளத்திலே ஜுவாலைவிட்டுக் கிளம்புவதை சுருங்கி விரியும் அவன் அடர்ந்த புருவங்களின் அசைவு கள் நமக்கு உணர்த்துகின்றன. எதிரிலே அரக்கு உருகிக் கொண்டிருக்கிறது தீயிலே! கையிலுள்ள முத்திரை குத்தும் கருவியை ஒரு முறை பார்த்துக்கொள் காள்கிறான். வேங்கையின் சின்னம் பொறித்த அந்தக் கருவியைக் கீழே வைக்கிறான். பிறகு தன் அகலமான வாயைத் திறக்கிறான்.