இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
114
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
ஒரே வரலாறு தான் உள்ளது. மாந்தனுடைய வரலாறே அது. தேசிய வரலாறுகள் யாவும் பெரிய நூலின் பகுதிகளே.
-தே
★★★★
கைகளோடு கைகள் இணைகின்றன, கண்கள் மேல் கண்கள் பதிகின்றன. நம் நெஞ்சங்களைப்பற்றிய பதிவு இங்குத்தான் தொடங்குகிறது.
-தோ
★★★★
விண்ணைப் படைத்த இறைவன் தானே மண்ணையும் படைத்தான்?
-க.கொ
★★★★
இரவில் பொழியும் மழைபோல், அவளுடைய ஆர்வம் ததும்பும் முகம் என் கனவுகளை வட்டமிடுகிறது.
- ப.ப.
★★★★
அடக்கம் உலகை ஆண்டிடும் என்கிற உண்மைக்கேற்ப அழகின் இசை நம் உள்ளத்தைத் தொடுகிறது.
-சா
★★★★
ஒரு பொருளின் பல்வேறு அங்கங்களுக்கு ஒரு முழுமையின் சமநிலைமை அளிக்கும் இணக்கம்தான் உண்மை என்பது.
-தே
★★★★