116
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உன்னிடம் உலகம் எந்த மெல்லிய இனிய பேச்சுகளினால் அன்பு மொழிகள் பேசுகின்றதோ, அந்த மொழிகளை, என் நெஞ்சமே உன்னிப்பாய் கேள்.
- ப.ப.
★★★★
கண்ணுக்குத் தெரியாததைக் கூட்டைக் காரிருளில் இசையின் தகவலைத் தன்னிடத்தில் கொண்டு ஒரு புதிராய் விலங்குகிற பறவையைப் போல அழகின் ஒவ்வொரு கணமும் என்னை அடையட்டும்.
-சித்
உலகில் வாழ்ந்திட நாம் பெற்றுள்ள உரிமையின் முழு விலையையும் நான் எரிந்த பின்னரே நாம் விடுதலை பெறுகிறாய்.
-மின்
★★★★
இரவின் இருட்டைப் போன்றதே படைப்பின் மறைபுதிரும்; எத்தனைப் பெருமை வாய்ந்தது அது.
-ப.ப.
★★★★
இலையுதிர் கால இரவின் எரிமீன்கள் போல, அக்கறையில்லாமல் நீ அளித்த வெகுமதிகள் எனது உள்ளத்தின் ஆழத்தில் தீப்பற்றி எரிகின்றன.
-மின்
★★★★
நான் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து நீ என் நெஞ்சத்தில் வாழ்ந்து வந்திருக்கிறாய்.
-த.ஓ
★★★★