இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
119
கொள்ளாமலிருக்கும்போது, சுவர்களே அயன்மைப்பட்டுப் போகிற சிறையில்தான் மாந்தன் வாழ்கிறான்.
- சா
★★★★
நேற்றைய அன்பினால் புறக்கணிக்கப்பட்ட கூட்டில் எனது இன்றைய அன்பிற்குப் புகலிடம் கிடைப்பதில்லை.
-மின்
★★★★
காலத்தின் தொடக்கத்திலிருந்து முடிவுரை உனக்கும், எனக்குமிடையே காதல் உள்ளது. இந்தப் பழைய காதலை யார்தான் அணைத்திட முடியும்.
- க.பா
★★★★
ஊமைநிலத்தின் துடிப்புள்ள குரல் போல், பயன் மரங்கள் என் பலகணியை நெருங்கி வருகின்றன.
-ப.ப.
★★★★
நிழல்களுக்கிடையே நடந்து செல்லும் காற்றின் கண்ணுக்குப் புலப்படாத உருவமொன்றை நீலவானில் உணர முடியாத தொடுதலை நிறுத்திவிட்டு,நீ எனக்குப் பிடிகொடாமல் மறைந்து விட்டாய்.
-மின்
★★★★
தான் படைத்த காலை வேளைகளே இறைவனுக்குப் புதிய வியப்புகளாகப்படுகின்றன.
-ப.ப.
தோட்டத்தில் நாணி நிற்கின்ற நிழல்களே