பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


லையுதிர்கால காலைப்பொழுதில் என் விருந்தாளி வீடு தேடி வந்திருக்கிறார்.பாட்டிசை, என் நெஞ்சமே. அவருக்கு நல்வரவு கூறு.

-எ

னது பணி முடிந்து விட்டது. கடலிலிருந்து தரைக்கு இழுக்கப்பட்டுள்ள படகுபோன்றவன் நான். மாலைப் பொழுதில் அலையெழுப்பும் நாட்டில் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

- ப.ப.

மாந்தன் அடையும் உயர்ந்த பேறு அன்பு ஒன்றே, ஏனெனில் அதன் மூலம் அதிகமானதொரு ஆற்றல் தன்னிடம் உள்ளது என்பதையும், தான் அனைவரிடம் நெருக்கமுள்ளவன் என்பதையும் அவன் நன்குணர்கிறான்.

一சா

ந்த ஒரு படகு எல்லா உலகங்களுக்கும் புகலிடமோ, அதைத் துண்டு துண்டாக்கிவிட்டுக் கடலைக் கடக்க முடியுமா?

கீ

ன் இறைவன் அருகிலேயே இருக்கிறான். அப்படியும் அவனைக் காணப் பனை மரம் ஏறிக் கொண்டிருக்கிறாய்.

- க.பா