பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


கெட்டது ஒதுங்க வேண்டியதுதான் அதனிடத்தில் நல்லது தோன்றவேண்டும்.

-சா

நாளைத் தொடங்கும் முன் உன்னைத் தொட்டுணர்வதாக உன்னிடம் வந்துள்ளேன்.

-எ

டவுளை எவன் கண்டிருக்கிறானோ, அவனுடைய பணியும், அவனுடைய ஓய்வும் இசையினால் நிரம்பியுள்ளது. அன்பின் ஒளியை அவன் எங்கும் தெளிக்கிறான்.

-க.பா

மாந்த வரலாற்றில், இறைவனின் வாழ்விசை

மாந்தனின் இசையை, ஒத்திசைவைத் தொடர்பு இருக்கின்றதை கேள்விப்பட பல வாய்ப்புகள் வந்துள்ளன.

-ஆ

} லையுதிர் கால வானத்திற்கு உள்ளார்வ வளத்தயும் மாந்தத் துடிப்பையும் அளிப்பது நமது பார்வையே.

- நினை

வானம் பொழிகிறது; என்னுள்ளம் இறைவனைக் காணத் துடிக்கிறது. உலகின் ஓசை நயம் எங்கு எழும்பித் தாழ்கிறதோ, அந்த இடத்தை என் நெஞ்சம் சென்றடைந்துள்ளது.

-க.பா