இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
131
மலர்களை மேலே உயர்த்தி விளையாடிடும் நீரூற்று எங்கே உள்ளது?
-ப.ப.
★★★★
தனது தனிப்பட்டக் கருத்தை அனைவரும் ஏற்று மகிழ்ச்சியடையச் செய்கிற பாவலனே உண்மைப் பாவலன்.
-சா
★★★★
இரவே, பகலாகிற வெறுமைக் கிண்ணியை நான் உன்னிடம் கொணர்கிறேன், புதியதொரு காலை விழாவிற்கு அடிகோலும் வகையில் எனது இருட்டினால் அதைத் தூய்மை செய்திடுவாய்.
-மின்
★★★★
எனது நெஞ்சத்தின் தனிமையில் பனியையும் மழையையும் முகத்திரையாக அணிந்துள்ள கைம் பெண்ணின் பெருமூச்சை உணர்கிறேன்.
-ப.ப.
★★★★
உன் வாழ்வைக் கொண்டு அன்பு விளக்கை ஏற்றிச் செல்.
-மின்
★★★★
மலையிலுள்ள தேவதாரு மரம் தன் இலைகளின் சலசலப்பின் ஓசையை அமைதி வழிப்பாட்டுப் பாடல்களாக மாற்ற ஈடுபடும் போராட்டங்களின் நிலையை இசைக்கிறது.
-மின்
★★★★