பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


நேயத்தைப் போன்று, மூடுபனியும் குன்றுகளுடைய நெஞ்சங்களை வருடுகிறது; அழகின் சிரிப்புகளை வெளிக் கொணர்கிறது.

- ப.ப.

வாழ்வது ஒரு பாவமானால், அதை மெய்ப்படுத்துவதற்கு அது காத்திருப்பதில்லை.

- சா

உன் நேயத்தின் பருதி ஒளி எண் எண்ணங்களின் முகடுகளை முத்தமிடட்டும்.

-எ

மாந்தனின் நிலையான வாழ்க்கையில் நான் வாழ விரும்புகிறேன்.

-நினை

வாழ்க்கையின் முறையைக் கண்டறிந்து, அதன் வழிச் செல்வதன் மூலம் நாம் சிறப்புற முடியும்.

- சா

வாழ்க்கையின் நிழல் படிந்த ஆழத்தில் சொற்களால்

சொல்லமுடியாத நினைவுகளில் தனிமைக் கூடுகள் குடி கொண்டுள்ளன.

-மின்