பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

133


பாவலனின் காற்று அவனது குரலைத் தேடிக் கடலின் மீதும், கானகத்தின் மேலேயும் வீசிச் செல்கிறது.

-ப.ப

தனது இசையை யாழ் எடுத்துச் செல்வதைப்போல், எனது வாழ்க்கையில் உனது காதலை நான் எடுத்துச் செல்வேன்.

-எ

தனது அமைதியான புகழ்பாடும் பாடலைப் புல்லி இதழ்களாகப் பெயரிடப்படாத ஒளியிடையே வாழ்க்கை அனுப்புகிறது.

-மின்

கேட்டுக் கொண்டிருக்கும் பைன் மரங்களுக்கு இடையே அமுக்கப்பட்ட கடலின் இரைச்சலைப்போல், என் நண்பனே, என் நெஞ்சத்தில் உன் குரல் அலைந்து அல்லாடுகிறது.

-ப.ப

பிறப்பையும் இறப்பையும் பற்றி எண்ணிப்பார். அவற்றுக்கிடையே பிரிவொன்றுமில்லை. கைகளில் வலது, இடது இரண்டும் ஒன்று தானே.

-க.பா

உன் கையை நான் இறுகப் பிடித்துக் கொள்கிறேன், எனது தனிமையில் உனது ஊடுணர்வு துணை நிற்கிறது.

-எ