பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


தளைகள் யாவற்றையும் அன்பு உதறிடும்போது, வாய்மையின் நிலையை அது அடைகிறது.

-க.பா

எளியவர்களாக நாம் இருக்கும்பொழுது, உலக நடை முறைகளுக்கு நேரெதிராக நாம் இருக்கும்பொழுது, உலக ஆற்றல் நம்மை அமுக்கவே செய்யும்; நாம் புகழ் பெறும்போது, அனைவருடனும் நேர்நிகராக நிற்கும் பொழுது, அதுவே நமக்குத் துணைபுரியும்.

-சா

வெளியேற வேண்டியதற்குக் கதவைத் திறந்துவை. ஏனெனில் தடைகளைச் சந்திக்க நேரிடும்போது, அது ஒன்றும் பெரிதாகத் தெரிவதில்லை.

-மின்

வேனிற்கால மலர்களைப்போல வாழ்க்கை அழகாக இருக்கட்டும், இறப்பு இலையுதிர் நாள் இலைகளாக இருக்கட்டும்,

-ப.ப

முழுமை பெறும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன துன்பத்தில் மகிழ்ச்சி என்றுமே விரிவடைவதும் அதில்தான் உள்ளது.

-சா


எனது உறக்கமாகிற இருட்டில், உனது அன்பு விண்மீன்களாக ஒளிவீசட்டும்.

-சா