இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
155
நமது முழுமையில் நாம் மகிழ்ச்சியடையும் போது, பயன்களை மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுப்பதும் இயல்பு தான்.
-ப.ப
★★★★
இரவு இருமையாலே சூழப்பட்டிருக்கிறது, எனது அமைதி போல் உனது உறக்கமும் ஆழமானது. ஓ, காதலின் நோக்காடே, விழித்தெழு, காரணம் வாயிலைத் திறந்துவிட எனக்குத் தெரியவில்லை.
-க.கொ
★★★★
மன உறுதிக்குச் சிறந்த பயன்தான் கிடைக்கிறது. ஆனால் அது கிட்டுவது கட்டுப்பாடு நிறைந்த உலகத்தில்லை, விடுதலை தவழ்ந்திடும் உலகத்தில்தான்.
-ஆ
★★★★
உன் முகத்தைக் கண்டேன் என்று உணர்ந்தேன்; இருளில் எனது படகைச் செலுத்தினேன்.
--குறு
★★★★
காதலே துன்பமாகிற எரியும் விளக்கை நீ கையி லெடுத்து வரும்பொழுது நான் உனது முகத்தைக் காண முடிகிறது. மகிழ்ச்சியின் உருவமே நீதான் என்று உணர்கிறேன்.
-ப.ப
★★★★