பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


பல்வேறு உருவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இறைவனே மகிழ்ச்சியின் எதிரொளி.

உலகம் உருவானது அவனுடைய இச்சையினால் தான். - ஆ

இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றப் படுவதிலில்லை மனிதனின் விடுதலை. தனது நன்மைக்காக தான் எடுப்பதற்காான முயற்சியில்தான் உள்ளது அது. - சா

என் வழியே நான் நடந்து செல்லும் பாதையில் என் தண்ணிச் சாடியிலிருந்து நீரைத் தெளிக்கிறேன்.

என் வீட்டிற்கு நான் எடுத்துச் செல்லும் நீர் மிகச் சிறிதே. - ப.ப

நிகரற்றதில் முழுமை பெறுவதைத் தேடி அலைகிறது பொதுத்தன்மை. - சா

உனது வயல்களில் பூத்த மலர்கள்தான் உனது புன்னகை. உனக்கு உரிமையான மலைகளில் வளரும் பைன் மரங்களின் சலசலப்பே உனது பேச்சு. ஆனால் உனது நெஞ்சமோ நாம் யாவரும் தெரிந்து வைத்துள்ள பெண்ணே. - ப.ப