பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

159


விண்ணின் முகத்தை இவ் உலகிற்குக் கொண்டு வந்த சிறப்புப் பெற்ற கள்ளங்படமற்ற இந்த வெள்ளை உள்ளத்தை, மாசு மறுவற்ற இந்தச் சின்னஞ்சிறு உயிரை, வாழ்த்துவாயாக! - வ.பி


நம்மிடம் புதைந்துள்ள எல்லையற்றதாகிற மகிழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. - சா

ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்கிறது செங்கதிர் வெளிச்சம்.

அதன் சேர்ந்த உடன் பிறந்தாளான மழையோ என் நெஞ்சத்தினிடம் பேசுகிறது. - ப.ப

அவனைக் கூடுவேன் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன். - க.பா

பகலில் பூத்த எனது மலர் மறக்கப்படும் தன் எழில் இதழ்களை உதிர்க்கிறது.

மாலை நேரத்தில் அது நினைவாகிற பொன் மயமான கனியாகப் பழுக்கிறது. - ப.ப