இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
இரவின் மடியில் ஒரு கமுக்கமான மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியால் என் நெஞ்சை நிரப்பிக் கொள்கிறேன்; நான் முழுவதும் அதை எடுத்துச் செல்கிறேன்.
-எ
★★★★
நினைவுகளின் அடியோசைகளை அமைதியுடன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் இரவின் சாலையைப் போன்றவன் நான்.
-ப.ப
★★★★
ஆழங்காண முடியாத கடலின் நெஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது பொன்மயமான குரலொன்று. கண்ணீர் புகை மூட்டத்தினூடே உன் முகம் காண முயல்கிறேன் நான்.
-ப.ப
★★★★
என் தலைவனின் அரசவையில் உண்மையின் ஒளி மட்டுமே சுடர் வீசுகிறது.
-க.பா
★★★★
என்னைப் பொறுத்தவரை, மாலை வானம் ஒரு சாளரம், ஏற்றிய விளக்கு, அதன் பின்னே ஒரு காத்திருப்பு.
-ப.ப
★★★★