இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
165
இறைவா, உலகின் செல்வமனைத்தையும் தூசாக மதிக்கிற செல்வத்தின் சின்னஞ் சிறிய பகுதியை எனக்களித்திடு.
-க.கொ
★★★★
வெளிச்சத்தை நோக்கி, இருட்டு பயணிக்கிறது.
-ப.ப
★★★★
எதுவுமே செய்ய வேண்டியது இல்லாமலிருக்கும் பொழுது நான் ஒன்றுமே செய்யாமலிருப்பது, தண்ணிர் அமைதியுடன் இருக்கும் பொழுது, மாலை நேரத்தில் கடற்கரை எவ்வாறிருக்குமோ அது போன்று அமைதியின் ஆழத்தில் தாக்கம் யாதொன்று மின்றி இருக்கிறது.
-ப.ப
★★★★
என் நெஞ்சமே, உன் தலைவனின் புன்முறுவலை மீறித் தனித்திருந்து, அவனிடமிருந்து விலகி எவ்வாறு அலைந்து திரிய முடியும்.
-க.பா
★★★★
அறிய முடியாமையே நிலையான விடுதலை.
-க.கொ
★★★★
பல யுகங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, சிதறிக்கிடக்கும் பரிதாபகரமான சிந்தனைகள், என் இதயக்குகையில் ரீங்காரமிட்டு, என்னைப்பாடவே தூண்டுகின்றன.
★★★★