பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

171


துயரத்தின் சாயல் ஒலிக்கும் பாடல்களையும் எடுத்து வந்து என்னை நிலைகுலையச் செய்கிறது.

-நா

ன்னருகில் ஒரு கண நேரம் தான் நீ நின்றிருந்தாய். படைக்கப்பட்ட பொழுதே ஆழங் காணமுடியாத ஒரு முகத்தை உள்ளடக்கிய பெண்ணாக என்னை வருடினாய்.

-க.கொ

ன் நெஞ்சமே, அலை உயர எழும்பி நிற்கிறது, காற்று வீசுகிறது, உன் விருப்பத்திற்கேற்ப, படகும் கூத்திடுகின்றது.

-நா

னதோ, வழக்கமான புழுதியில் அமர்ந்திருக்கும் விண்ணகம். எனக்காக நீ அங்கே காத்திருக்கிறாய். யாவருக்காகவும்தான் நீ அங்கே காத்திருக்கிறாய்.

-க.கொ

னது சேமிப்பைக் கரையில் நிறுத்தி வைத்திடு. பின்னர் வரையரையில்லாத வெளிச்சத்தைத் தேடி ஆழங் காண முடியாத இருட்டின் மேல் பயணம் செய்வாய்.

-நா

ளியின் வாழ்த்து கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது.

-எ