இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
173
தெல்லாம் நான் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், அமைதிக்குள் அடக்கப் பட்டுள்ளதாகவும் இருக்கிறது அந்தக் கமுக்கம். அதுவே என் விருப்பம்.
-நா
★★★★
எனது பாடல் உன் கண்களின் கருமணிகளில் கலந்து எந்த செய்தியையும் ஆழமாய் ஊடுருவிப் பார்க்கும் ஆற்றலை உனக்கு அளிக்கும்.
-கா.பா
★★★★
நாம் வாழ வேண்டும். தன் பாடல்களைப் பொழியும் போது ஒரு பாவலன் எத்தகைய மகிழ்ச்சியை அடைகிறானோ, அந்த மாசற்ற மகிழ்ச்சியை நாம் அடைய வேண்டும்.
-ஆ
★★★★
மனவுறுதிப் பறவை இன்னும் இருண்ட இரவிலும் பாடுகிறது.
-ப.ப
★★★★
வலியர் பேராசையை விடுக; எளியர் துணிவு கொள்க. இஃதின்றி உலக நட்புறவு வராது.
-தா. சொ
★★★★
இந்த மாலைப் பொழுதில் நிலவும் அமைதி ஒரு காலடியோசையை எதிர் பார்ப்பதாகத் தோன்றுகிறது. நீயோ என் கண்ணீருக்குக் காரணம் கேட்கிறாய்.
-நா
★★★★