இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
187
எழும்புகிறாய். பாடல்கள் பீறிட்டு எழும்போது என் நெஞ்சம் அவற்றினடியில் முழுகிப்போய்விடுகிறது.
-நா
★★★★
நம் உள்ளத்திற்கு உவகை ஊட்டும் பொழுதுதான் எந்தவொரு பொருளும் நமக்கு முழுதும் உரித்தாகிறது.
சா
★★★★
தான் முளைத்தெழும் பரந்த உலகிற்குத் தகுதியாகிறது புல்லின் இதழ்.
பப
★★★★
அந்த ஒருவனைக் கண்டு பிடிப்பது என்பது எல்லாவற்றையும் அடைந்திருப்பதேயாகும். அதில் தான் நமது அறிதியும், உயர்ந்ததுமான உரிமை உள்ளது.
சா
★★★★
என் பாடல்கள் தேனீக்களைப் போன்றவை. உன் நினைவை ஏதோவொரு நினைவு - நறுமணம் வீசும் காற்றினூடே, உனது வெட்கத்தைச் சுற்றி, மறைந்திருக்கும் ஒரு புதிர்ச் செல்வத்தைக் காணத் தொடர்கிறது.
-நா
★★★★
உனது மறைந்த மெய்தொடு உணர்வு பொங்கி வழியும் என் நெஞ்சத்தை எனது உடலின் ஆழத்திற்குக் கொண்டு செல்லட்டும்.
-நா
★★★★