பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

197


காதலுக்குரிய மதிப்பினை இரு கைகளாலும் நீ அள்ளியே எனக்குத் தந்திடத் தந்திட என் உள்ளத்தில் பதுங்கி இருந்த ஓர் ஏமாற்றம் தானே வெளியே தோன்றிடும். -நூ.பா

வாழ்வுடன் ஒட்டியிராது போனால் பாட்டின் செல்வம் யாவும் பயனற்றே போகும். -நூ.பா

உண்மை விலை கொடுக்காமல் பெற்றிடும் இலக்கியப் புகழ், வெறும் கள்ளத்தனமே; இது நல்லதே அன்று. -நூ.பா

அன்பிரக்க மழைதனைப் பொழிந்திடுவேன்; கற்சிறைகளைத் தகர்த்திடுவேன், உலகிடை திசைகெட்டுத் திரிந்திடுவேன்; பித்தன் போலப் பாட்டிசைத்திடுவேன். -நூ.பா

அம் மெல்லிய சிரிப்பும், சுவைதரு கனிமொழியும் மையல் நோக்கும் காதலைக் காட்டுவனவே. -நூ.பா

இன்னலுக்கு இளகியும், காதலைத் தந்தும் இன்பக் கூட்டினை மறைவில் எழுப்யியும் எந்நாளும் அது நிலைக்கும் என்றே நம்பியும் வீண் செய்தேன் இவ் வாழ்வினை. -நூ.பா