இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
அன்பின்றி உண்மை கைம் பொண்ணாகிறது.
- த.ஓ
★★★★
கண்ணித் துளி அல்லது புன்னகைப்போன்று, உள் மனத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதன் வெளிச்சித்திரம் தான் பாட்டு.
- நினை
★★★★
தன்னிச்சை இல்லாமலேயே நினைவு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கும் மனித ஆற்றலை வழிநடத்தி மனிதனுக்குத் தூண்டுதலாயிருப்பவள் தான் பெண்.
-ப.ஓ
★★★★
தன்னிடம் கைநீட்டி இறைவன் வரும்பொழுது, மனிதன் தன் செல்வச் செழிப்பை உணர்கிறான்.
- மின்
★★★★
ஆழம் காணமுடியாத இன்ப ஊற்றிலிருந்து எண்ணற்ற சிரிப்புச் சிதறல்கள் உலகம் முழுவதும் தெறித்துக் கிடக்கின்றன.
- நினை
★★★★
தன் முகத்திரையை நீக்கியவாறு, ஓசையின்றி அன்பு நடைபோட்டு, நிழல் பணிவுடன் ஒளியைத் தொடர்கிறது.
-ப.ப
★★★★