இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
29
கண்கள் பார்ப்பதென்னவோ மண்ணையும், தும்பு தூசையும்தான்; ஆனால் உணர்வது நெஞ்சத்தின் மூலமே. மாசற்ற மகிழ்ச்சியடைகிறது அதில்.
- த.ஓ
★★★★
இரவாகிய ஆழமான புதிரிலிருந்து இன்னும் ஆழமான பகலாகிய புதிருக்குள் புகுவது தான் பிறப்பு.
- மின்
★★★★
பாடல் கனிகளால் என் நெஞ்சத்தை நிரப்பிடும் வகையில் உனது அமைதியின் மையத்திற்கு என்னை இட்டுச் சென்றிடு.
ப. ப
★★★★
உரிமையுடன் செயல்பட, வெளி உலகின் மென்மையான அழுத்தமன்று நாம் வேண்டுவது. உலகின் சுமையை எளிதாக மட்டுமல்ல மகிழ்ச்சியுடன் தாங்குவதற்கான
உரமளிக்கும் அன்பையே நாம் வேண்டுவது.
எஎ
நிலைத்திருக்கும் அன்பு மொழியைப் பாடிக் கொண்டிருக்கின்றன விண்மீன்கள்.
- க.கொ
★★★★
முடிவற்ற வைகறையின் வளையத்தில் புதிய இலை களில் புதியதாகப் பிறப்பெடுக்கிறது அதோ செங்கதிர்.
- மின்
★★★★