பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


நான் உன் கைகளைப் பற்றிக் கொள்கிறேன். உனது கரிய விழிகளில் புகுந்து கொள்கிறது என் நெஞ்சம்.

- மின்

தேவன் தன்னுலகில் இயங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் தேவியோ நமது அடி ஆழ இருண்மையில் கண் துயில் கொண்டிருக்கிறாள்.

-எ.எ

அடக்கிவைக்கப்பட்ட அன்பின் ஆழமான துயரமாக மலர்கின்றன இளவேனிற் காய் மலர்கள்.

கா. ப

என்னுடைய பலமற்ற தோணியைக் கொண்டு ஆசைக் கடலைக் கடக்க நான் தவித்துத் திணறுகிறேன். என் முயற்சியும் விளையாட்டுத்தான் என்பதை மட்டும். ஐயோ, நான் மறந்தே விடுகிறேன்.

நீ எனது நெஞ்சத்தின் மையத்தில் இருந்தாய். ஆகையினால், என் நெஞ்சம் சுற்றித் திரிந்தபோது, அவள் உன்னைக் காணவேயில்லை, எனது அன்புகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் கடைசி வரை உன்னை நீயே மறைத்துக் கொண்டாய். ஏனெனில் நீ எப்பொழுதும் அவற்றிலிருந்தாய்.

- க.கொ