இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
31
நான் உழைக்கும்போது இறைவன் என்னை மதிக் கிறான். நான் பாடும்பொழுது அவன் என்னை விரும்புகிறான்.
- மின்
★★★★
வாழ்க்கை நமக்கு அளிக்கப்படுகிறது. மற்றவருக்கு வழங்கியே நாம் அதை அடைகின்றோம்.
- ப.ப
★★★★
கட்டுப்படுத்தும் அதே சமயம் அன்பு, விடுதலையும்
அளிக்கிறது, ஏனெனில் ஒன்று சேர்ப்பது தான் அன்பு.
-எ.எ
★★★★
மலரும் ஒவ்வொரு செம்மலரும் என்றும் இளவேனிலை அளித்திருக்கும் செம்மலரிடமிருந்து எனக்குக்
கிடைக்கும் வாழ்த்துகள்.
- மின்
★★★★
உண்மைக்கு அப்பாற்பட்டு எவனொருவனுடைய
புகழ்பளிச்சிடாமலிருக்கிறதோ அவனே பெருமைக்குரியவன்.
- ப.ப
★★★★
அன்பு செலுத்துவதனால் நாம் அடையும் மகிழ்ச்சியே
இறுதியானது. ஏனெனில் அதுவே (அன்பு செலுத்துவதே) இறுதியான உண்மை.
- ப.ஓ
★★★★