இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உனது ஒளியைப் பொழிந்து கொண்டு இந்த நொடிப்பொழுதை உன் மடியின் குறுக்கே நன்கு பரப்பிக் கொள்வாய்.
-எ
★★★★
எல்லையற்றது என்கிற புல்லாங்குழல் இடைவெளி இல்லாமல் ஊதப்படுகிறது. அதலிருந்து பிறக்கும் ஒலியிசை காதல்.
-க. பா
★★★★
காலம் காலமாக மனிதகுலம் ஒரே படைப்பில் தான் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. ஆன்மிக வாழ்வு என்பதே அது.
-படை
★★★★
என் நெஞ்சத்தைக் கமுக்கக் காதலில் அவனுக்கு அளித்து விட்டேன். நம்பிக்கையெல்லாம் வீண்போய்விடும் என்ற எண்ணத்தில் தான் நான் நாள்களைக் கடத்தி வருகிறேன்.
-இரு.அ
★★★★
தவறு தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. நேர்மையினால் அது முடியும்.
- பப
★★★★
அதோ பார், என் மன்னியே, அடிவானத்தின் கிழக்கில் பகல் மலர்கிறது. -
-இரு.அ
★★★★