இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
39
பெரிய அரசுகளின் மேல் இறைவன் வெறுப்படை கிறான். ஆனால் ஒரு பொழுதும் சின்னஞ் சிறிய மலர்கள் மேல் அன்று.
ப. ப
★★★★
துன்பமளிப்பது நீ எனக்குச் செய்யும் மரியாதை.
- நா
★★★★
உனது அன்பு உருவெடுத்துள்ளது போன்று இந்த உலகத்தை நான் கருதுகிறேன். அப்பொழுது எனது அன்பும் அதற்குத் துணைநிற்கும்.
-ப. ப
★★★★
செருக்கு அவனது வெறுப்புகளைக் கற்களினடியில் புதைத்து விடுகிறது. அன்பு தனது அடிபணிதலை மலர்களின் வாயிலாகத் தெரிவிக்கிறது.
- மின்
★★★★
மனிதனின் செயல்களினால் இறைவன் மனந் தளர்வதில்லை என்கிற உண்மையை ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து வைத்திருக்கிறது.
-ப. ப
★★★★
இனி என்றுமே நீ என் பாடல்களுக்கு முன்னே நிற்க மாட்டாய், அவற்றில் ஒன்றாக இருப்பாய்.
கா. ப
★★★★