இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
41
நான் ஆசைப்படுவதை அடைந்திட இந்தப் பேரண்டம் முழுவதுமே எனக்கு உதவிக் கொண்டிருக்கிறது.
எ எ
****
காதல் என்பது ஒரு விளங்காத புதிர். ஏனெனில் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது அது.
- மின்
****
எனது வாழ்க்கை பயனற்றது என்கிற கொடிய வறுமையினால் கந்தல் கந்தலாகக் கிழி படாமலிருக்கட்டும்.
எ
****
இறைவன் பொழியும் மழை நீர்போல், ஒரு தகப்பனின் அன்பு தீர்ப்பு வழங்குவதில்லை, மாறாக வற்றாத ஊற்றிலிருந்து பாய்ச்சப்படுகிறது.
- நா
****
விண்மீன்கள் ஒளிவீசும் தன் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவன் காத்திருப்பது தனக்கு விளக்கெடுத்துவரும் மனிதனுக்காகவே.
- மின்
****
காதல் எப்பொழுதுமே ஈகம் செய்வதற்கு அணியமாகஉள்ளது என்பது நடைமுறை உண்மை. ஆனால் அதை உண்மை என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
-ப.ப
****