இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
எனக்கு அன்பு மறுக்கப்பட்டால், காலைப்பொழுது ஏன் தன் நெஞ்ச வேட்கைகளைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்? - -எ
★★★★
விண்ணெங்கும் பரவி நிற்கும் ஒளி தனது எல்லையைப் புல்லில் படிந்திருக்கும் பனித்துளியில் காண்கிறது. - - மின்
★★★★
என் நண்பனே, உன்னை நான் நெடுங்காலமாகத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். - -படை
★★★★
துயரம் நிறைந்த என் வாழ்வில் அழகையும் ஒழுங்கு முறையையும் கொண்டு வா. - -கா. ப
★★★★
வழி விடு, மொட்டே, வழிவிடு, உன் நெஞ்சத்தைக் கீறி வழிவிடு. - -படை
★★★★
கனவுகளின் மூலம் மண்ணகம் விண்ணுலகம் படைத்திட காலம் காலமாக வானகம் தன்னை வெறுமையாக வைத்திருக்கிறது. - -மின்
★★★★