இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
வாழ்க்கை என்னும் ஊற்று, நீரை வாரி வடிக்கிறது; சிரிப்பிலும், கண்ணிலும் நுரைத்து நிற்கிறது.
-நினை
★★★★
செம்மலரைப் பார்க்க அவனுக்குக் கண்கள் உள்ளன. ஆனால் அவன் முட்களை மட்டுமே பார்க்கட்டும்.
-ப.ப
★★★★
தனியாக வாழும் தன்னுரிமையை என்றுமே நாம் கோர முடியாவிட்டால், நாம் ஒரு நாளும் ஒருவர் மற்ற வருக்காக வாழமுடியாது.
-எ.எ
★★★★
பகல் பொழுதின் சேவையில் எனது அன்பு தன் ஆற்றலைப் பெறட்டும்; இரவின் அணைப்பில் தன் அமைதியை அடையட்டும்.
- மின்
★★★★
காதலிக்கும்போது, இலை பூவாக மலர்கிறது.
தொழும்போது, மலர் கனியாக மாறுகிறது.
- ப.ப
உனது அழைப்பை ஏற்று உனது பேரரசில் நான் நடமாடவேண்டும்.
- எ
★★★★
கிளைகள் கனி அளிக்கின்றனவே என்பதற்காக நிலத்தினடியில் படர்ந்திருக்கின்ற வேர்கள் பலன் கேட்கிறதில்லை.
-ப.ப
★★★★