54
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
ஓ, நண்பனே, உன் உடல் இறைவனின் இசைக் கருவி அதன் தந்திகளை முறுக்கி அதனிடமிருந்து தனது இன்னிசையை எடுத்துக் கொள்கிறான்.
-க.ப
★★★★
விதையின் தளையிலிருந்து விடுபட்டு முன்பின் தெரியாத இடத்தினூடே வீரச்செயல்களைத் தேடிச் செல்லும் சிறகு படைத்த உயிர்தான் மரம்.
- மின்
★★★★
கடலைக் கடப்பது போன்றது. இந்த மனித வாழ்க்கை; அங்கு நாம் யாவரும் குறுகலான கப்பலில் சந்தித்துக் கொள்கிறோம்.
-ப.ப
★★★★
நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்காகவே இறைவன் நம்மை தவிர்க்கிறான். தன் நெஞ்சத்தில் நெருக்கமாக வைத்துக் கொள்வதற்காகவே, தன்னைத் தானே ஆன்மாவில் அர்ப்பணித்துக் கொள்கிறான்.
- மின்
★★★★
அதிகாரப் பேரரசில் அடக்கி நொறுக்கியே நாம் முன்னேறுகிறோம். ஆனால் அன்புப் பேரரசில் ஆசையை வெறுத்து ஒதுக்கியே நாம் முன்னேறுகிறோம்.
- எ.எ.
★★★★