58
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
என்னைத் தன் பணியாளனாகப் பார்ப்பதில்லை இறைவன். யாவருக்கும் பணிபுரியும் தன்னையே என்னில் காண்கிறான் அவன்.
- மின்
★★★★
என் கனவுகள் யாவற்றிலும் அசைந்தாடும் அவளுடைய கூந்தலின் நறுமணத்தையே உணர்கிறேன்.
-கா.ப
★★★★
வாழ்க்கைப் பாதையில் நடைபோட நமக்குத் துணை புரிவது தன்னுணர்வு என்கிற ஒளியே.
-எ.எ
★★★★
அறிவைத் தேடி அலைபவர்களும் உள்ளனர்; செல்வத்தைத் தேடி அலைபவர்களும் உள்ளனர். நான் பாட விரும்புகிறேன். ஆகவே உன் துணையை நாடுகிறேன்.
-மின்
★★★★
தனக்கே உரிய மலர்களை மனிதனின் கைகளிலிருந்தே பரிசாகப் பெறவே இறைவன் காத்திருக்கிறான்.
-ப.ப
★★★★
ஏரிக்கரையிலே வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள், தலைவிரித்தாடி இருண்ட வானை மோதி அறைகின்றன. மழையில் நனைந்து அலங்கோலமாய் இருக்கும் சிறகுகளுடன், காகங்கள் புளிய மரக்கிளைகளிலே மௌனமாக வீற்றிருக்கின்றன. ஆற்றின் கீழைக் கரையிலே இருள் இருண்டு வருகின்றன.
-ப.ப
★★★★