இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
67
மிகச் சிறந்தது எதுவும் தனியாக வருவதில்லை.
பலவற்றோடு கூட்டுச் சேர்ந்து கொண்டுதான் அது வருகிறது.
-ப.ப
★★★★
அரவமற்றிருந்து அமைதியாகிற என் உள்ளுயிர் உன் சொற்களைக் கேட்கட்டும்.
-எ
★★★★
புகழ் என்னை நாணச் செய்கிறது. ஏனெனில் கமுக்கமாக அதற்கு நான் ஏங்குகிறேன்.
-ப.ப
★★★★
சிரித்தவாறே பாய்ந்து வரும் நீரோடையிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியில் தன் தவிப்பைக் காண்கின்றன கூழாங்கற்கள். அதே போன்று, விண்ணிலிருந்து மகிழ்ச்சி கொண்டுவரும் இன்னிசைப் பாடல்களில் தன் துயரத்தைக் காண்கிறது வலி.
- எ.எ
★★★★
இளந்தென்றலாக மாறி உன்னைத் தழுவி விளை யாடுவேன்; நீ குளிக்கும் நீரில் சிறு அலைகளாகத் துள்ளி வருவேன்; தவழ்ந்து வந்து உன்னை மீண்டும் மீண்டும் முத்தமிடுவேன்.
-வ.பி
★★★★
கோயிலின் துயரச் சூழலிலிருந்து விடுபட்டுக்-