பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ன் தெய்வமே, நீ என்னைக் காப்பாற்றும் பொழுது, உலகங்களின் நடையில் அடி வைப்புகள் மென்லென உள்ளன.

– எ

ழி முறைகளிலிருந்து மகிழ்ச்சிக்கு, அறத்தி லிருந்து அன்புக்குத் திரும்பும்பொழுது முடிவுள்ளது என்று முடிச்சை அவிழ்த்து முடிவற்றது, என்கிற நிலைக்குத் திரும்பும்போது நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நிறை வேற்றி முடிக்கிறோம்.

-சா

துயரத்தைக் கொணர்ந்தாலும் காதலை நம்பு. உன் நெஞ்சக் கதவை அடைத்திடாதே.

- தோ

ஓ, வானமே, எனக்கு உரித்தான பலகணியிடத்து உன்னுடன் என் மனம் இணைகிறது; உனக்கே உரிய பேரரசின் வெட்ட வெளியில்லை.

- மின்

ன்னைச் சலனப்படுத்தும் அளவிற்கு அன்பிற்கு முழு உரிமை அளிக்கப்படுவதையே நான் விடுமுறை யென்று கருதுகிறேன்.

- நா