த. கோவேந்தன்
79
உணர்வு நிலையின் முழுமையே அன்பு.
-சா
★★★★
முடிவற்ற உள்ளுயிரே முடிவான உண்மை என்பதை நாம் எப்பொழுது உணர்கிறோமோ,அதனுடன் நாம் இணையும்பொழுது நம் உள்ளுயிரின் மகிழ்ச்சியை நாம் புரிந்து கொள்கிறோம்.
- படை
★★★★
விண்மீன்கள் தோன்றுவதற்கு முன்னர் நிலவிடும் இருட்டுப்போல், தனது கடைசி இசை பிறக்கக் காத்திருக்கிறது, என் வாழ்க்கையின் வெற்று வேய்க்குழல்.
- மின்
★★★★
மாந்தனை நாம் விரும்பினாலன்றி, மாந்தனை நாம் என்றுமே நன்கு புரிந்து கொள்ள முடியாது.
-சா
★★★★
எல்லாப் பொருள்களும் உயிர். நாம் சார்ந்த கண் ணோட்டத்தில் தன் போன்றே இருக்கிறது என்பதை உணரும் பொழுதுதான், உலகம் பற்றிய நம் உணர்தல் முழுமை பெறுகிறது.
-படை
★★★★
உனது உலகிற்கு என்னை இட்டுச் செல். என்னிடம் இருப்பவை யாவற்றையும் மகிழ்சியுடன் துறப்பதற்கான உரிமையை அளித்திடு.
-ப.ப
★★★★