இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
இளவேனிற் பருவம் ஒரேயடியாக மறைந்து விட்டதேயென்று வாடிப்போன மலர் பெருமூச்சு விடுகிறது.
-மின்
★★★★
இந்த மரத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் இலைகள் சிறு குழந்தையின் விரல்கள் போன்று என் நெஞ்சத்தை வருடுகின்றன.
-ப.ப
★★★★
வாழ்க்கை என்கிற என் தோட்டத்தில், என்றுமே சேர்க்கப்பட்டுச் சேமிக்கப்படுத்தப் படாத ஒளி, நிழல் போன்றே என் செல்வமும் இருந்திருக்கிறது.
-மின்
★★★★
உனது இசைக்கலை, ஒரு போர்வாள் போல, அங்காடிச் சந்தடியில் அதனுடைய நெஞ்சத்தில் பாய்ச் சட்டும்.
-ப.ப
★★★★
ஆழ்ந்த அச்சத்தில் என்னைக் காப்பாற்றுமாறு நான் இரக்கக் கூடாது. எனது விடுதலையைப் பெற எனக்குப் பொறுமை இருக்கட்டும்.
-க.கொ
★★★★
என்றுமே எனதாயிருக்கிற பழம், நீ ஏற்றுக் கொண் டுள்ள பழம்தானே.
-மின்
★★★★