பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

89


என் வலியைக் குறைத்திடு என்று உன்னிடம் இரந்திட மாட்டேன்; மாறாக என் நெஞ்சம் அதை வென்றிட அருள்புரி என்றுதான் வேண்டிடுவேன். - க.கொ

விண்ணாகிற கோவிலில் கண்ணுக்குப் புலப்படாத கொடியை ஊன்றிடு.

அது ஒளி வீசத் தொடங்குமுன் உன் மனத்தை அமைதியில் ஆழ்த்திடு. - க.பா


ன்றைய பணியை முடித்து விட்டேன். தாயே, உனது தோளில் என் முகத்தை மறைத்துவைத்துக் கொள்வாய். நான் கனவு காண வேண்டும். - ப.ப

வன் ஆட்சி செலுத்துகிற இடத்தில் இறைவனுக்கு நம் பத்தியைச் செலுத்த வேண்டும்.

அவன் அன்பு செலுத்துகிற இடத்தில் அவனைப் பார்த்து நாம் நகைப்போம். - எ.எ

ட்டற்ற பறவையே, உனது குரல் நான் உறங்கும் கூட்டினை எட்டுகிறது. அயர்ந்திருக்கும் என் சிறகுகள் முகில்களின் மேல் படர்ந்திருக்கும் ஒளி நோக்கிப் பயணம் செய்வதாகக் கனவு காண்கின்றன. - மின்