92
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
ஆழம் கணக்கிடப்படாத கடல் போன்று அன்பின் வலி என் வாழ்வைச் சுற்றி இன்னிசை பொழிகிறது. மலர்ந்திருக்கும் சோலைகளில் பாட்டிசைக்குப் பறவைகள் போல் அன்பின் மகிழ்ச்சி இன்னிசை எழுப்புகிறது.
-ப.ப
★★★★
இருட்டிலிருந்தும் ஒளியிலிருந்தும் வானம் தன் சொற்களைத் தேடுகின்றதே, அதே போல் தனது ஒலிகளிலிருந்தும் அமைதியிலிருந்தும் மனம் தன் சொற்களைத் தேடுகிறது.
-மின்
★★★★
நீயே வானம், நீயே கூடு----
-கீ
★★★★
முழுமையான அமைதியில் நெஞ்சத்தை நிலைக்கச் செய்யும் அன்பை எனக்கு அனுப்பிவைத்திடுவாய்.
-க.கொ
★★★★
கண்ணுக்குப் புலப்படாத இருட்டு அவனது புல்லாங் குழலை இசைக்கிறது. ஒளியின் தாளம் விண்மீன்களாகவும், எண்ணங்களாகவும், கனவுகளாகவும் வடிவு எடுக்கின்றன.
-மின்
★★★★
தங்களுடைய தீபங்களை அவை தாங்களே ஏற்றிக் கொள்கின்றன. தங்களுடைய ஆலயங்களில் தங்களுடைய மொழியிலேயே இசைக்கின்றன.